செய்திகள்
பலி

உப்பிலியபுரத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2021-11-05 09:50 GMT   |   Update On 2021-11-05 09:50 GMT
உப்பிலியபுரத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி கவுண்டர் தெருவைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 45) விவசாயி. இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், விக்னேஷ் வயது 23 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்று தீபாவளியன்று அதிகாலையில் புதுப்பட்டி- ஒக்கரைக்கிடையே அமைந்துள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது மோட்டார் பம்புக்கு செல்லும் வயரில் உள்ள மின்கசிவு தெரியாமல் வயரை மிதித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று ரவிச்சந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News