செய்திகள்
கைது

கடலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி பட்டாசு விற்பனை- 11 பேர் கைது

Published On 2021-11-05 09:57 IST   |   Update On 2021-11-05 09:57:00 IST
கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 11 பேரை கைது செய்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனையொட்டி அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாதோப்பு ஆகிய உட்கோட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி 11 இடத்தில் பட்டாசு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 11 பேரை கைது செய்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News