செய்திகள்
மேலும் 5 நாள் காவல் நீட்டிப்பு- தனபாலிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை
செல்போனில் நடந்த தகவல் பரிமாற்றங்களை அழித்தது தொடர்பாக தனபாலை, கோவை, சேலத்திற்கு அழைத்து வந்து தனிப்படையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக தனிப்படையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜ் வழக்கும் மறுவிசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் ஆதாரங்கள், சாட்சியங்களை அழித்ததாக கனகராஜ் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
2 பேரையும் தனிப்படையினர் காவலில் எடுத்து பல்வேறு கேள்விகளை கேட்டு முக்கிய தகவல்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் தனபாலின் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் போலீசார் அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடுதல் அவகாசம் கேட்டனர்.
நீதிபதி தனபாலுக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
மேலும் செல்போனில் நடந்த தகவல் பரிமாற்றங்களை அழித்தது தொடர்பாக தனபாலை, கோவை, சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். அப்போது பல்வேறு முக்கிய தகவல்கள் இந்த வழக்கில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக தனிப்படையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜ் வழக்கும் மறுவிசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் ஆதாரங்கள், சாட்சியங்களை அழித்ததாக கனகராஜ் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
2 பேரையும் தனிப்படையினர் காவலில் எடுத்து பல்வேறு கேள்விகளை கேட்டு முக்கிய தகவல்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் தனபாலின் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் போலீசார் அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடுதல் அவகாசம் கேட்டனர்.
நீதிபதி தனபாலுக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
மேலும் செல்போனில் நடந்த தகவல் பரிமாற்றங்களை அழித்தது தொடர்பாக தனபாலை, கோவை, சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். அப்போது பல்வேறு முக்கிய தகவல்கள் இந்த வழக்கில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.