செய்திகள்
கோப்புபடம்

தரமற்ற விதைகளால் பயிர்கள் பாதிப்பு - வயல்களில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-11-02 09:04 GMT   |   Update On 2021-11-02 09:04 GMT
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் தரமற்ற விதைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழு ஆய்வு செய்தது.
மடத்துக்குளம்:

உடுமலை பகுதிகளில் பாகல், பூசணி, பீர்க்கன், சுரைக்காய் உள்ளிட்ட கொடி வகைகளில் காய்ப்புத்திறன் இல்லை. தரமற்ற விதைகளால் கடும் பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள பாதிக்கப்பட்ட சாகுபடி வயல்களில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் ராஜேஸ்வரி, கார்த்திகேயன், விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு மீள் வயல் ஆய்வு செய்தது. இதுகுறித்து அறிக்கையை விரைவில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது: 

விவசாயிகள் கொள்முதல் செய்யும் விதைகளை அரசு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகளில் வாங்க வேண்டும். வாங்கும் போது விதைகளின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் மற்றும் பருவம் ஆகியவற்றை ரசீதுகளுடன் ஒத்துள்ளதா என கவனித்து கையெழுத்திட்டு வாங்க வேண்டும்.

வாங்கும் ரசீதுகளை சாகுபடி காலம் முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். விற்பனை ரசீது இல்லாமல் விதை, நாற்றுக்கள் விற்பனை செய்தாலோ, போலி ரசீது வழங்கியிருந்தாலோ, சம்பந்தப்பட்ட விதை விற்பனையாளர்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகள் மீது விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துணை இயக்குனர் தெரிவித்தார்.
Tags:    

Similar News