செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் சிலம்பரசன். காவேரிப்பட்டணம் பேரூர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது அது திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சிலம்பரசன் நேற்று கே.ஆர்.பி. டேம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.