செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா

Published On 2021-10-31 17:49 IST   |   Update On 2021-10-31 17:49:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 15 பேருக்கு தொற்று உறுதியானது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 15 பேருக்கு தொற்று உறுதியானது.

நேற்று வரை 189 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 54 ஆயிரத்து 94 பேர் குணமடைந்து உள்ளனர். 667 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News