செய்திகள்
தற்கொலை

திருவண்ணாமலை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2021-10-29 14:10 GMT   |   Update On 2021-10-29 14:10 GMT
திருவண்ணாமலை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா ஒரத்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காவியா (வயது 26). இவர், முருகனின் 2-வது மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 26-ந்தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் மனமுடைந்த காவியா விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காவியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முருகனின் முதல் மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News