செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டை அருகே அரிசி கடத்திய 3 பேர் கைது

Published On 2021-10-29 14:30 IST   |   Update On 2021-10-29 14:30:00 IST
தேன்கனிக்கோட்டை அருகே அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை வட்டம் தளியில் இருந்து ஆனைக்கல் செல்லும் சாலையில் கொரனூர் கிராமம் அருகில் ராஜேஷ் (வயது 19), சதீஷ் (22), அப்பு (17) ஆகியோர் ஒரு வாகனத்தில் அரிசி கடத்தி வந்தனர். உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 மூட்டை அரிசி பறிமுதல் செய்தனர்.

Similar News