செய்திகள்
வி‌ஷம்

வெம்பாக்கம் அருகே தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-10-27 10:58 GMT   |   Update On 2021-10-27 10:58 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் மனமுடைந்த தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெம்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஹரிஹர பாக்கம் கிராமம் பள்ளி கூட தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 45). கூலி வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி தேவகி (45) இவர்களுக்கு ரம்யா, சந்தியா என்ற 2 மகள் உள்ளனர். பூங்காவனத்திற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று வழக்கம் போல் மது குடிக்கப் பணம் கேட்டபோது இவருடைய மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷ மருந்து சாப்பிட்டு மயக்கமான நிலையில் இருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News