செய்திகள்
ஊத்தங்கரை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரையை அடுத்த எக்கூரை சேர்ந்த விவசாயி மணி (வயது 58). இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த விவசாயி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.