செய்திகள்
ஊத்தங்கரை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள கவர்னர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கவுசிகாஸ்ரீ (வயது 18). சம்பவத்தன்று இவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவுசிகாஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.