செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் கைது

Published On 2021-10-24 11:24 GMT   |   Update On 2021-10-24 11:24 GMT
தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலகுண்டன் (வயது 31), விவசாயி. இவரை அந்த பகுதியை சேர்ந்த பச்சியப்பன் மற்றும் அவரது தம்பிகள் மன்னார் (43), மாதப்பன் (40) ஆகியோர் தாக்கினர். இது குறித்து அஞ்செட்டி போலீசில் பாலகுண்டன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பச்சியப்பன், மன்னார், மாதப்பன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News