செய்திகள்
ஆரணி அருகே பைக்குகள் மோதி வாலிபர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் திருமால் (வயது28). இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு ஏரி குப்பத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் கம்பெனிக்கு பைக்கில் திருமால் சென்றார்.
ஏரிக்குப்பம் கூட்ரோடு அருகில் முன்னே சென்ற நடுகுப்பம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் சூப்பர்வைசர் சரவணன் புல்லட் மீது திருமால் பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த படுகாயமடைந்த திருமால் மற்றும் லேசான காயமடைந்த சரவணன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திருமால் வரும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் திருமால் (வயது28). இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு ஏரி குப்பத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் கம்பெனிக்கு பைக்கில் திருமால் சென்றார்.
ஏரிக்குப்பம் கூட்ரோடு அருகில் முன்னே சென்ற நடுகுப்பம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் சூப்பர்வைசர் சரவணன் புல்லட் மீது திருமால் பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த படுகாயமடைந்த திருமால் மற்றும் லேசான காயமடைந்த சரவணன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திருமால் வரும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.