செய்திகள்
கொரோனா தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18,000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்

Published On 2021-10-24 09:48 GMT   |   Update On 2021-10-24 09:48 GMT
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற முகாமில் ஒரே நாளில் 18,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1075 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. கண்காணிப்புக்குழு அலுவலர்கள் முகாம் வாரியாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் குறித்து கண்டறிந்து அவர்களை தடுப்பு முகாமுக்கு அழைத்து வந்தனர்.

ஊராட்சி ஒன்றியம் பெரியக்கோளப்பாடி அரசு தொடக்கப் பள்ளியிலும், கண்ணகுருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பாய்ச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

நேற்று மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் ஒரே நாளில் 18,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News