செய்திகள்
விஷம்

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2021-10-23 10:27 GMT   |   Update On 2021-10-23 10:27 GMT
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி விசாரணை நடத்தி வருகிறார்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள அம்பலவர் கட்டளை தெற்குத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 29). இவர் ஐ.டி.ஐ. (தொழில் கல்வி) படித்துள்ளார். அவர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றும், இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் மாரியப்பனின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News