செய்திகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Published On 2021-10-16 09:52 GMT   |   Update On 2021-10-16 09:52 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவித்தார்.

சென்னை:

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 6-ந்தேதி மற்றும் 9-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மற்றும் தற்செயல் தேர்தல் நடைமுறைகள் இன்றுடன் (16-ந்தேதி) முடிவடைவதால் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் இன்று (16-ந்தேதி) காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... கனமழைக்கு வாய்ப்புள்ள 14 மாவட்டங்கள்

Tags:    

Similar News