செய்திகள்
தற்கொலை

அந்தியூர் அருகே மேற்கு வங்க வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-10-15 10:56 GMT   |   Update On 2021-10-15 10:56 GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மேற்கு வங்க வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:

மேற்கு வங்க மாநிலம் குக்கிளி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அமல்பால் (வயது 34). ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த செம்டாபாளையம் பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் கடந்த 2-ந் தேதி முதல் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்த அமல்பால் சோகமாக இருந்துள்ளார். அப்போது அவரது மனைவியிடம் செல்போனில் கோபமாக பேசி உள்ளார். பின்னர் மாலை வேலை முடிந்ததும் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அமல்பாலுக்கு அவரது உறவினர்கள் போன் செய்துள்ளனர். ஆனால் அமல்பால் போனை எடுக்கவில்லை. இது குறித்து அவர் தங்கி வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் அமல்பாலின் உறவினர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அமல்பால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News