செய்திகள்
மது விற்ற 2 போ் கைது

விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 போ் கைது

Published On 2021-10-14 08:21 GMT   |   Update On 2021-10-14 08:21 GMT
விக்கிரமங்கலம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் செட்டித்திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டித்திருக்கோணம் நடுத்தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 40) மற்றும் முருகையன் (64) ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டபோது இருவரது வீட்டிலிருந்தும் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News