செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள உண்டிக்கான் கொட்டாயை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 71). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அர்ஜூனன், விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வசாரணை நடத்தி வருகிறார்கள்.