செய்திகள்
கைது

திருப்புவனம் அருகே மது விற்ற வாலிபர் கைது

Published On 2021-10-03 14:16 GMT   |   Update On 2021-10-03 14:16 GMT
திருப்புவனம் அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:

ஏனாதி விலக்கு பஸ் நிறுத்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பூவந்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் சென்ற போலீசார் இதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி (வயது36) என்பவரை பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News