செய்திகள்
விஷம்

வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து மீனவர் தற்கொலை

Published On 2021-10-01 10:46 GMT   |   Update On 2021-10-01 10:46 GMT
வேதாரண்யம் அருகே தீராத வயிற்று வலி காரணமாக மீனவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் சக்தி குருபாலன் (வயது 22). மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணமாகவில்லை.

தீராத வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தாராம். சம்பவத்தன்று வி‌ஷ மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News