செய்திகள்
கோப்புபடம்

பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு கொரோனா

Published On 2021-09-30 17:17 IST   |   Update On 2021-09-30 17:17:00 IST
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் புதிதாக 21 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 2,744 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 14 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 7 பேரும் என மொத்தம் 21 பேர் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும் குணமடைந்ததால் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் 649 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 483 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 1,444 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,300 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 11,933 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 11,610 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 237 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 86 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 16,683 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 16,325 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 254 பேர் உயிரிழந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது 104 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News