செய்திகள்
மங்களமேடு அருகே கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகன் வெங்கடேசன்(வயது 18). கொத்தனாராக வேலை பார்த்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வெங்கடேசனின் தாய் சிவபாக்கியம் கண்டித்துள்ளார். இதனால் வருத்தம் அடைந்த வெங்கடேசன் மது போதையில் வீட்டில் இருந்த எலி பேஸ்டை(விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதைக்கண்ட நடராஜன் உள்ளிட்டோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.