செய்திகள்
கைது

நாகை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2021-09-25 11:18 GMT   |   Update On 2021-09-25 11:18 GMT
நாகை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை தொடர்பான குற்ற வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் மருந்து கொத்தலரோடு அரசன் காலனி பகுதியை சேர்ந்த விஜயபாரதி (வயது23) என்பவர் மீது பல்வேறு கொலை, வழக்குகள் உள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பரிந்துரையின்படி, கலெக்டர் அருண் தம்புராஜ் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News