செய்திகள்
ஜிப்மர் மருத்துவமனை

ஜிப்மர் மருத்துவமனையில் சிவப்பு ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை

Published On 2021-09-24 10:46 GMT   |   Update On 2021-09-24 10:46 GMT
ஜிப்மருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நோயாளிகள் வருகின்றனர். ஏனென்றால் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாகும்.
புதுச்சேரி:

புதுவையில் ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினமும் 8 ஆயிரம் வெளி நோயாளிகள், 2 ஆயிரம் உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சிவப்பு ரே‌ஷன்கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை அளிக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஜிப்மரில் உள்ள அனைத்து துறை தலைவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பாளர் அனுப்பி உள்ள சுற்றிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜிப்மர் மருத்துவமனையில் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரத்து 499 வரை ஊதியம் பெறும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜிப்மருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நோயாளிகள் வருகின்றனர். ஏனென்றால் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாகும்.

இந்த நிலையில்,  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ரே‌ஷன் கார்டு (சிவப்பு அட்டை) வைத்திருக்கும் நோயாளிகளுக்கு மட்டும் ஜிப்மரில் இலவசமாக வெளிப்புற, உட்புற சிகிச்சை அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


எனவே சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தங்கள் மாநிலத்தில் வழங்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ரே‌ஷன் கார்டை கொண்டு வர வேண்டும்.

வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். அதன் பிறகு வேறு எந்த வருமான சான்றிதழும் ஏற்கப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Tags:    

Similar News