செய்திகள்
தற்கொலை

திருமருகலில் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை

Published On 2021-09-24 16:03 IST   |   Update On 2021-09-24 16:03:00 IST
திருமருகலில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். இவர் திருமருகல் சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் சுபைதா (வயது 22). பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு பின்னால் உள்ள கொட்டகையில் சுபைதா தூக்குப்போட்டு கொண்டனார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுபைதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் அங்கு வந்து சுபைதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News