செய்திகள்
காரைக்காலில் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணி தீவிரம்
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. எனவே வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கவிடாமல் தூய்மையாக பராமரிக்கவேண்டும்.
காரைக்கால்:
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், நோய் கட்டுப்பாட்டு திட்ட மலேரியா பிரிவு இயக்குனர் கணேஷ் ஆகியோர் டெங்கு கொசு மற்றும் லார்வா புழுக்களை ஒழிக்க நலவழித்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
அதன்பேரில் காரைக்கால் மாவட்ட நலவழித்துறை தொழில்நுட்ப உதவியாளர் சேகர் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேலு, உதவியாளர்கள் ராஜாராம், மதிவாணன், ஜெயச்சந்திரன், வெங்கட்ராமன், சேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர், பொது இடம், கட்டுமான பணிகள் நடக்கும் இடம், அரசு கட்டிடங்கள் ஆகிய இடங்களில் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. எனவே வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கவிடாமல் தூய்மையாக பராமரிக்கவேண்டும், காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் வலி மற்றும் வாந்தி, உடல் சோர்வு இருந்தால், சுயமாக மருத்து எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனைக்கு சென்று முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், நோய் கட்டுப்பாட்டு திட்ட மலேரியா பிரிவு இயக்குனர் கணேஷ் ஆகியோர் டெங்கு கொசு மற்றும் லார்வா புழுக்களை ஒழிக்க நலவழித்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
அதன்பேரில் காரைக்கால் மாவட்ட நலவழித்துறை தொழில்நுட்ப உதவியாளர் சேகர் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேலு, உதவியாளர்கள் ராஜாராம், மதிவாணன், ஜெயச்சந்திரன், வெங்கட்ராமன், சேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர், பொது இடம், கட்டுமான பணிகள் நடக்கும் இடம், அரசு கட்டிடங்கள் ஆகிய இடங்களில் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. எனவே வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கவிடாமல் தூய்மையாக பராமரிக்கவேண்டும், காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் வலி மற்றும் வாந்தி, உடல் சோர்வு இருந்தால், சுயமாக மருத்து எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனைக்கு சென்று முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.