செய்திகள்
கத்திக்குத்து

பெரம்பலூர் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட பூக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து

Published On 2021-09-19 11:39 GMT   |   Update On 2021-09-19 11:39 GMT
பெரம்பலூர் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட பூக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

தஞ்சை மாவட்டம், போத்திரிபாளையம் வடக்கு வாசலை சேர்ந்தவர் வையாபுரி. இவரது மகன் அய்யப்பன் (வயது 31). இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அந்த பூக்கடையின் குடோன் அருகே சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் மணிகண்டன் (22) தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அய்யப்பன் அவர்களிடம் இங்கு வைத்து மது அருந்தக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பட்டா கத்தியால் அய்யப்பனை குத்தியதில், அவர் காயமடைந்தார். இதனை கண்ட அதே பூக்கடையில் வேலை பார்க்கும் ஆலம்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்த சீதாபதி மகன் ஆனந்த் (32), அதனை தடுக்க முயன்றபோது, அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆனந்தும், அய்யப்பனும் சேர்ந்து மணிகண்டனை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மணிகண்டனின் நண்பர்கள் தப்பியோடி விட்டனர். காயமடைந்த 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News