செய்திகள்
வளவனூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
வளவனூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளவனூர்:
வளவனூர் அருகே உள்ள தொந்திரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மனைவி சுதா (வயது 33). இவர் விவசாய கூலி வேலை செய்து, சேமித்து வைத்த பணத்தை குப்பன் எடுத்துச் சென்று மதுகுடித்து வீண் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அரளிவிதையை அரைத்து (விஷம்) குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.