செய்திகள்
ஆற்காட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆற்காட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தண்டுகாரன் தெருவைச் சேர்ந்த ஜெமினி (வயது 21), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு கொண்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.