செய்திகள்
விபத்து பலி

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

Published On 2021-09-18 09:17 GMT   |   Update On 2021-09-18 09:17 GMT
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதியைச் சேர்ந்தவர் வீரையா(வயது 70). விவசாயியான இவர் நேற்று காலை சொந்த வேலையாக ஆலங்குடி வந்துவிட்டு ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது மாங்கோட்டை வல்லக்குளத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் ராமராஜ் (30) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போகும் வழியிலேயே அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News