செய்திகள்
தற்கொலை

பெரம்பலூர் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-09-17 10:52 GMT   |   Update On 2021-09-17 10:52 GMT
பெரம்பலூர் அருகே திருமணமாகி 4 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் அமரேசன். இவரது மகன் தியாகராஜன் (வயது 30). இவருக்கு கடந்த 13-ந்தேதி ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று காலை தியாகராஜன் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் கழிவறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை.

இதனால் அவரது குடும்பத்தினர் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழிவறையின் ஜன்னலில் நைலான் கயிற்றை கட்டி, அதில் தியாகராஜன் தூக்கில் தொங்கியவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தியாகராஜனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தியாகராஜன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 4 நாட்களிலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News