செய்திகள்
கொரோனா தடுப்பூசி

விருதுநகர் மாவட்டத்தில் 2-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 19-ந் தேதி நடக்கிறது

Published On 2021-09-17 09:53 GMT   |   Update On 2021-09-17 09:53 GMT
கொரானா நோய் முற்றி உயிரிழப்பு ஏற்படாமலிருக்க, வரும்முன் காத்திட, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது ஒன்றே தீர்வு ஆகும்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 வரை 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழத்தை கொரோனா 3-வது அலையில் இருந்து பாதுகாப்பதற்காகவும், தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்கும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த பல்வேறு இடங்களில், வாராத்தின் அனைத்து நாட்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 18 வயதிற்கு மேற்பட்ட 16 லட்சத்து 36 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 16-ந் தேதி வரை முதல் தவணையாக 8 லட்சத்து 78 ஆயிரத்து 691 பேருக்கும், 2-வது தவணையாக 2 லட்சத்து 54 ஆயிரம் 410 பேருக்கும் ஆக மொத்தம் 11 லட்சத்து 33 ஆயிரத்து 101 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் கடந்த 12-ந் தேதி நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 1070 தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 75 ஆயிரத்து 643 பேருக்கு தடுப்பூசி செலத்தப்பட்டு விருதுநகர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 53 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவிகிதத்தை எட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாமகள்; மூலமாக நடைபெற உள்ளது.

கொரானா நோய் முற்றி உயிரிழப்பு ஏற்படாமலிருக்க, வரும்முன் காத்திட, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது ஒன்றே தீர்வு ஆகும்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வருகிற 19 -ந் தேதி நடைபெறுகின்ற 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரானா இல்லாத விருதுநகர் மாவட்டத்தையும் தமிழகத்தையும் உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News