செய்திகள்
கோப்புபடம்

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

Published On 2021-09-16 11:48 GMT   |   Update On 2021-09-16 11:48 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் இணையதளத்தின் மூலம் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர், விதிகளை முறையாக கடைபிடித்து இணையதளத்தின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பித்து உரிமம் பெறுவோர், உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைத்து கொள்ளக்கூடாது.

மேலும் அவசர காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து உரிமைதாரரும், அவரது பணியாளர்களும் தெரிந்திருக்க வேண்டும். பட்டாசுகளை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம் மட்டுமே வாங்கி விற்பனை செய்ய வேண்டும். பட்டாசுகளை ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களே கையாள வேண்டும்.

உரிமத்தை அலுவலர்களின் தணிக்கையின் போது பார்வையில் படும்படி வைக்க வேண்டும். இருப்பு பதிவேடு மற்றும் தணிக்கை பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும் என்பது போன்ற உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விற்பனையாளரின் உரிமைத்தை ரத்து செய்வதுடன், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News