செய்திகள்
தற்கொலை

கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-09-15 10:29 GMT   |   Update On 2021-09-15 10:29 GMT
பங்களாப்புதூரில் கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பங்களாப்புதூரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 55) விவசாயி.

இவர் விவசாயம் செய்வதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் போதிய அளவு வருமானம் விவசாயத்தில் கிடைக்கவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தட்சிணாமூர்த்தி வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் தட்சிணாமூர்த்தி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் விஷம் குடித்துவிட்டு, வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை உடனே கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடன்தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட தட்சிணாமூர்த்திக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
Tags:    

Similar News