செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள வத்திராயிருப்பு பேரூராட்சியில் டிரைவராக வேலை பார்த்தவர் கட்டாரி பாண்டியன் (வயது 52). இவர் வத்திராயிருப்பு பேரூராட்சியில் இருந்து வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு கிருஷ்ணன் கோவில் நோக்கி வரும்போது முனியாண்டி கோவில் விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனர். இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.