செய்திகள்
கோப்புபடம்

வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-09-11 12:57 GMT   |   Update On 2021-09-11 12:57 GMT
வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் பாதாங்கியை சேர்ந்தவர் மணி (வயது 40) விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த மணி நேற்று வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News