செய்திகள்
புதுவையில் பாரதியார் நூற்றாண்டுவிழா ஓராண்டு கொண்டாட திட்டம்- கவர்னர் தமிழிசை தகவல்
கவிஞர்கள், தமிழ் அறிஞர்களை அழைத்து புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் பாரதியார் நினைவுதினத்தையொட்டி அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தான் பாரதியார் 10 ஆண்டுக்கு மேல் வசித்தார். அந்த காலத்தில்தான் பல புத்தகங்களை எழுதினார். பகவத் கீதையையும் மொழி பெயர்த்தார்.
புதுவையில் பாரதியார் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட முதல்-அமைச்சரிடம் பேசியுள்ளேன். கவிஞர்கள், தமிழ் அறிஞர்களை அழைத்து புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவையில் பாரதியார் நினைவுதினத்தையொட்டி அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தான் பாரதியார் 10 ஆண்டுக்கு மேல் வசித்தார். அந்த காலத்தில்தான் பல புத்தகங்களை எழுதினார். பகவத் கீதையையும் மொழி பெயர்த்தார்.
புதுவையில் பாரதியார் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட முதல்-அமைச்சரிடம் பேசியுள்ளேன். கவிஞர்கள், தமிழ் அறிஞர்களை அழைத்து புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.