செய்திகள்
நகை பறிப்பு

அரக்கோணத்தில் மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2021-09-04 18:30 IST   |   Update On 2021-09-04 18:30:00 IST
அரக்கோணத்தில் மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் நேருஜிநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கோபி. இவர், அரக்கோணம் இரும்பு தொழிற்சாலையில் வேலை பாா்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி வச்சலா (வயது 68). இவர், நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகில் நடந்து வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென வச்சலா அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். அதிர்ச்சியடைந்த வச்சலா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிட்டார். அங்கிருந்தவர்கள் வருவதற்குள் மர்மநபர்கள் வேகமாக சென்று விட்டனர்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் வச்சலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News