செய்திகள்
மரணம்

பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்

Published On 2021-09-04 09:58 GMT   |   Update On 2021-09-04 09:58 GMT
பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தொழுதூர் பஸ் நிறுத்தத்திற்கு எதிரே உள்ள நிழற்குடையில் நேற்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஞானபிரகாசம் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News