விருத்தாசலம் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று
விருத்தாசலம்:
தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 469 அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியுடன் வகுப்புகளுக்கு வந்தனர். அவர்களுக்கு சானிடைசர் தெளித்து முக கவசம் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.
என்றாலும் கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோ பாலபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதனை தொடர்ந்து அவர் தனிமைபடுத்தப்பட்டார். இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று நெய்வேலி தனியார் பள்ளி ஆசிரியைகள் 2 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது. இந்த 2 பேரும் நெய்வேலியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்றும் ஆசிரியை ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்சாலம் அருகே பெரிய நெசலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் தன்னை பரிசோதித்து கொண்டார். இதற்கான முடிவு இன்று காலை வந்தது. அப்போது அந்த ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவ- மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அந்த வகுப்புகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 4 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் மாணவ- மாணவிகள் இடையே அச்சம் நிலவி வருகிறது.