செய்திகள்
ராணிப்பேட்டையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
ராணிப்பேட்டையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை, காரை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 25). இவர் நேற்று ராணிப்பேட்டை, முத்துக்கடை அருகே உள்ள அம்மூர் சாலையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.
இதேபோல் வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள குறவன்குடிசை பகுதியை சேர்ந்தவர் பாலு (36). இவர் ராணிப்பேட்டையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.
கஞ்சா விற்ற 2 பேரையும், ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.