செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-09-03 04:09 GMT   |   Update On 2021-09-03 04:09 GMT
பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, பவானி ஆற்றுக்கு 3390 கன அடி என மொத்தம் 3 ஆயிரத்து 890 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம்:

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் தொடர்ந்து இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வந்தவுடன் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக பவானி ஆற்றில் திறந்து விடப்படும்.

அதன்படி கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து அந்தப் பகுதியில் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நீலகிரி மலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3928 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, பவானி ஆற்றுக்கு 3390 கன அடி என மொத்தம் 3 ஆயிரத்து 890 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News