செய்திகள்
கோப்புபடம்

ரத்தினகிரி அருகே லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை

Published On 2021-09-01 20:05 IST   |   Update On 2021-09-01 20:05:00 IST
ரத்தினகிரி அருகே வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் பெட்ரோல் ஊற்றி லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த கீழ்மின்னல் பகுதியைச் சேர்ந்தவர் எழில்மாறன் (வயது 38), லாரி டிரைவர்.இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி கல்பனா ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News