செய்திகள்
கைது

காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது

Published On 2021-08-31 20:03 IST   |   Update On 2021-08-31 20:03:00 IST
காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில்:

காட்டுமன்னார்கோவில் கோட்டைமேடு, ஆஞ்சநேயர் கோவில் பின்புறம், சந்தை தோப்பு ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவனேசன் (வயது (21), கோட்டைமேட்டை சேர்ந்த விக்னேஷ் (22), ஜூலியஸ்சீசர் (24), மில்டன் (22), புளியந்தோப்பு தெருவை சேர்ந்த வினோத்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News