செய்திகள்
ரெயில் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஊஞ்சலூருக்கும், கொடுமுடிக்கும் இடையே செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் பெண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இறந்து கிடந்தவர் ஊஞ்சலூர் அருகே உள்ள வெங்கம்பூர் கொள்ளுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த நல்லமுத்துவின் மனைவி வசந்தா (வயது 55) என்பதும், காது சரியாக கேட்காத அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அங்கு வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வசந்தாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.