செய்திகள்
நெமிலி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
நெமிலி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த பள்ளூர் மேலாண்ட தெருவை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 56). அங்குள்ள கோவிலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கோவிலில் தீபம் ஏற்றுவதற்காக சென்றார். அப்போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.