செய்திகள்
கோப்புபடம்

நெமிலி அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2021-08-24 19:58 IST   |   Update On 2021-08-24 19:58:00 IST
நெமிலி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ் வெங்கடாபுரம் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசு மதுபான கடையில் மதுவை வாங்கி விற்பனை செய்ததாக நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் கைது செய்தார். அவரிடமிருந்து மது பாட்டில், ரூ.320 பறிமுதல் செய்யப்பட்டது. அரசு அனுமதியின்றி மது அருந்த இடமளித்ததாக கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த வேணி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று திருமால்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருள் என்ற முருகன் (47), மது விற்பனை செய்தபோது அவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 மது பாட்டில்கள், ரூ.320 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News