செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 1500 சுற்றுலா பயணிகள் வருகை

Published On 2021-08-24 09:59 GMT   |   Update On 2021-08-24 09:59 GMT
சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதாலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததாலும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தோட்டக்கலைத்துறை, சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் நேற்று திறக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் திறக்கப்பட்டன. நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்து பூங்காக்களையும், சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.

நேற்று ஒரே நாளில் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 1,536 சுற்றுலா பயணிகள் வருகை தந்து பார்வையிட்டனர். ரோஜா பூங்காவுக்கு 567 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 103 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 274 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 72 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 82 பேரும் வருகை தந்தனர்.

இன்று 2-வது நாளாக பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டது. நேற்றைவிட இன்று சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து இருந்தனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியை காண முடிந்தது.

சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதாலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததாலும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tags:    

Similar News