செய்திகள்
அரக்கோணம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
அரக்கோணம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே வேடல் காந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி குப்பம்மாள் (வயது 45). சுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அதனை கைவிடுமாறு குப்பம்மாள் தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த குப்பம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.